30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட ராணுவ படையினர்!

30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட ராணுவ படையினர்!

  ஜி.கே.சேகரன்,

  இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற ராணுவ நண்பர்கள் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்தனர்  - தங்களை விட்டு பிரிந்த நண்பர்களுக்காகவும் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள் - பசுமைதாயகம் சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது

 வேலூர்மாவட்டம்,காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில்  இந்திய ராணுவத்தில் பேட்டாலியன் 9/91 பிரிவில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக பயிற்சி பெற்ற ராணுவ நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. கம்மவான்பேட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இதில் முன்னாள் படைவீரர்கள் ஜெகதீஸ்வரன்,கஜேந்திரன்,சங்கர்பிரசாத்,ராஜீவன் உள்ளிட்ட 62 முன்னாள் படை வீரர்கள் பங்கேற்றனர்.

  ஒன்றாக பயிற்சி பெற்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நண்பர்கள் 30 வருடங்களுக்கு பிறகு சந்தித்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

  அப்போது அவர்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள், பின்னர் தங்களுடன் பயிற்சி பெற்ற தற்போது மறைந்த 4 நண்பர்களுக்கு அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலியை செலுத்தினர்.

   பின்னர் பசுமைதாயகம் அமைப்பின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின்  ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

   இதில் முன்னாள் படைவீரர்கள் நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஏராளமானோர் பங்கேற்றனர்.