600 மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடி நிதி உதவி:-அமைச்சர் பங்கேற்பு!! தங்கக்கோவில் தாராளம்!!!

600 மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடி நிதி உதவி:-அமைச்சர் பங்கேற்பு!! தங்கக்கோவில் தாராளம்!!!

 கு.அசோக்,

   திருமண உதவி திட்டத்தில் 80 சதவிகிதம் போலியாக இருந்தது கண்டுபிடித்ததால் தான்லந்த திட்டத்தை நிறுத்தினோம் - நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ படிப்பிற்கு ரூ.26 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள் அமைச்சர் காந்தி அரியூரில் பேச்சு.

 வேலூர் மாவட்டம், அரியூர் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் வித்யா நேத்ரம் என்றபெயரில் 600 மாணவ,மாணவிகளுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

 தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்ற இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு கல்வி உதவிதொகைகளை வழங்கினார்.

 விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பெற்றோர்களும் மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்

 பின்னர் விழாவில் அமைச்சர் காந்தி பேசுகையில், பெண்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதி திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டது.

 கடந்த ஆட்சியிலும் தாலிக்கு தங்கம் பெண்களுக்கு வழங்கப்பட்டது இதில் திருமண நிதியுதவி திட்டத்தில் 80 சதவிகிதம் போலியானவை, 20 சதவிகிதம் மட்டுமே உண்மையாக பெண்களுக்கு பயன்படுகிறது.

  இதை கண்டறிந்து தான் தற்போதைய முதல்வர் அந்த திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டு பெண்கள் கல்லூரியில் சேர்ந்து படித்தால் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளார்.

 மாணவர்கள் கல்வியை பயின்று மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். தற்போது நீட் தேர்வை எழுதினாலும் மருத்துவ படிப்பிற்காக ரூ.26 லட்சம் வசூலிக்கிறார்கள் என்ன செய்வது மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கல்வி பயின்று முன்னேற்றம் அடைய வேண்டும்.

  அதற்கு நாராயணி பீடம் போன்றவர்கள் செய்யும் உதவியை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று பேசினார்.