மனசாட்சியே இல்லீங்களா ஆபிசர்ஸ்! நெற்கதிரை கட்டி அணைத்து கதறிய பெண் விவசாயி! ஜோடிப்பு என தகவல்!!

 

ஜி.கே.சேகரன்,

 ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழித்து நாசம் செய்த பொதுப்பணித் துறையினறால்  விவசாயி கதறி அழுதார். 

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்காவிற்க்குட்பட்ட கலவை அடுத்த பள்ளமுள்வாடி பகுதியில் வசித்து வருபவர் பாலு இவருக்கு சொந்தமான 2  ஏக்கர் விளை நிலம் அப்பகுதியில் உள்ளது

  அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட கால்வாய் புறம்போக்கு நிலத்தில் விவசாயி பாலு  மூன்று மாத பயிரான ஏடிடீ37 ரக குண்டு நெற்பயிர் சாகுபடியை பயிரிட்டுள்ளார்.

  இந்நிலையில் சம்மந்தப்பட்ட விவசாயி யாரும் இல்லாத போது நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர்.

 பின்னர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டர் இயந்திரம் மூலமாக பயிறிட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நெற்பயிர்களை முழுமையாக அழித்து ள்ளனர்.

    இன்னும் நான்க்ய்ந்து தினங்கள் கால அவகாசம் வழங்கி இருந்தால் அறுவடை முடித்த பிறகு நாங்கள் அந்தப் ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாயம் செய்திருக்க  மாட்டோம் என பாலு மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் தெரிவித்தனர்.

  முன்னதால நெற்பயிர்களை கட்டி அணைத்து  பார்வதி அழுதார். அந்தஞ் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

   ஆக்கிரமிப்பு பகுதி என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து இருந்தால் அந்த நெற்பயிர் அறுவடை செய்து இருப்போம் அல்லது அரசாங்கமே அதை அறுவடை செய்து அனாதை இல்லம் போன்றவைக்கு கொடுத்து இருக்கலாம்.

  அப்போதாவது எங்கள் மனது ஆறியிருக்கும் என  கூறி கதறி அழுத விவசாயி தற்போது பயிரிட்ட நெற்பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது என்றார்.

   பயிர் செய்ய பயிரிட படாதபாடு படுகிறோம் எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  நீர் நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்கள் பலவற்றை கல்வி நிறுவனங்களும், செல்வந்தர்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று எழுதப்படாத சட்டமோ என்று கேட்கக்கூடிய அளவுக்கு இன்றைக்கு அராஜகங்கள் அரங்கேறி வருகிறது.

   இந்நிலையில் இது ஜோடிக்கப்பட்டது என்று அலுவலர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

   அப்படி கூறப்பட்டவையில், இது ஜோடிக்கப்பட்டது விவசாயிக்கு பயிர் செய்வதற்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள் இதில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று ஆறு மாதத்திற்கு முன்பாகவே வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயிர் செய்து விட்டால் ஒன்றும் செய்யவே மாட்டார்கள் என்று இதுபோன்ற நிகழ்வை தொடர்ந்து மேற்கொண்டு இவர் வருகிறார்.

விவசாயியை கஷ்டப்படுத்த யாரும் விரும்பவில்லை இருந்தபோதிலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அரசு இடத்தை கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது கலவையில் மட்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை, ஆக்கிரமிப்பு

 செய்துள்ள பொதுமக்களும் தங்கள் இடங்களை காலி செய்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.