ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்ற துடிக்கும் தீய சக்திகள்- போலி சங்கங்கள்:- நடவடிக்கை கோரி ஆட்சியருக்கு மனு!

க.பாலகுரு,
திருவாரூரில்- ஓ.என்.ஜி.சி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுருத்தி பேரணி .ஆர்ப்பாட்டம்,எம்.பி செல்வராசு தலைமையில் நடந்தது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை பற்றி பொய்யான அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசை வலியுருத்தி பேரணி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசு தலைமையிலும், நாகை முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, கீழ்வேளூர் எம்.எல்.ஏ நாகை மாலி, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து முன்னிலையிலும் நடைப்பெற்றது.
பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் முடிவுற்றது.
பிறகு திருவாரூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அம்மனுவில், இயற்கை எண்ணெய் எரிவாயு கழகம் ஓ.என்.ஜி.சி , ஒரு மத்திய அரசு நிறுவனம் , காவேரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிறுவனத்தை சார்ந்து பல தொழில் நிறுவனங்கள்,,வணிக நிறுவனங்களின் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் ஓ.என்.ஜி.சியில் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
ஓ.என்.ஜி.சி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது , ஓ.என்.ஜி.சி நிறுவனம் பலமுறை மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டங்கள் செயல்படுத்தவில்லை எனவும், எதிர்காலத்தில் அப்படி எந்த திட்டமும் செயல்படுத்துவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டது.
இந்தியாவின் எண்ணெய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டிற்கு ஆயிரம் கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு நலத்திட்டங்கள செயல்படுத்தப்படுகிறது.
படித்த பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது. சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட களை செயல்படுத்துகிறது. குறிப்பாக புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் உணவும் வழங்கப்பட்டது. கஜா புயலின் போது வழங்கிய நிவாரண உதவிகள இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.
இப்படி பல்வேறு வகையில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குறித்து ஆதாரமில்லாத குற்றசாட்டுகளையும், அவதூறுகளையும் சிலர் கூறிவதுடன் இந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
எனவே தவறான ஆதாரமில்லாத அவதூறு பரப்பும் தனிநபர்கள், போலி சுயநல சங்கங்கள் மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், ஏற்கனவே செயல்படும் பணிகளை தொடர்ந்து செயல்படவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்..
நிகழ்ச்சியில் சி.பி.ஐ திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் , சி.ஐ.டி. யூ மாநில துணைத்தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் முருகையன், அமேட் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், எல்.பி.எப் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பிரபு, எல்.எல்.எப் தலைவர் அந்தோணிராஜ், டி.எல்.எல்.எப் தலைவர் நகு செல்வசுந்தரம், சிஏ.பி.சி..எல். யூ தலைவர் ரமேஷ், செயலர் லாரன்ஸ், விவசாய நலசங்க தலைவர் நன்னிலம் சேதுராமன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.ஆர்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், சமூக அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.