தேவை யற்ற 'ஆணியா' அறநிலையத்துறை!அமைச்சர் விளக்கம்!
ஜி.சாந்தகுமார்,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்து சமய அறநிலையதுறையை மையப்படுத்தி குற்றச்சாட்டுகளை வீசியிருப்பது வழக்கம் போலவே அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றின விவரம் வருமாறு,
ஆலய பாதுகாப்பை வலியுறுத்தி பா.ஜனதாவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மீதும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
துறைமுகம் தொகுதியில் அமைச்சருக்கு சொந்தமாக பல கட்டிடங்கள் உள்ளன. இதேபோல் குறைந்த வாடகைக்கு விடுவாரா?
தமிழகத்தில் தேவை யற்ற 'ஆணி' அறநிலையத்துறை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து அதை கலைப்பதுதான்.
இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவைதான் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்,
அவரது குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது ஆவேசமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- போகிற போக்கில் யாராவது சொல்வதை கேட்டு எதையாவது பேசுவது என்ற பாணியில் பேசி வருகிறார். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். உண்மையை அறிந்து பேசுவதுதான் அவர் ஏற்கனவே வகித்த பதவிக்கும் இப்போது வகிக்கும் தலைவர் பதவிக்கும் அழகு. அவரது அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அவர் நிரூபிக்க தவறினால் நாங்கள் சொல்வதை கேட்க தயாரா?
கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? டெண்டரா விட முடியும்?
என்று மறுப்புகளை சொன்னார்.