ஆளுநர்கள் ஆக்பூர்வமாக செயல்படுகின்றனர்! சொல்கிறார் தமிழிசை!

கு.அசோக்,
ஆளுநர்கள் ஆக்பூர்வமாக செயல்படுகின்றனர் ஆனால் கட்சிகள் தங்களுக்குள் உடைந்துவிட்டு ஆளுநர் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாக இருக்கும் ஆளுநர்கள் அனைவரும் அரசியல் சட்டத்தின்படிதான் நடக்கிறார்கள் ஆளுநரை குற்றம்சாட்ட இப்படி பயன்படுத்துகின்றனர் ஆனால் ஆளுநர்கள் நேர்மையாக சட்டபடி நடக்கிறது - புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
வேலூர்மாவட்டம், அரியூரில் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் ஸ்ரீநாராயணி தங்ககோவில் இணைந்து பாலாறு பெருவிழா மாநாடு நடக்கிறது.
இன்று நடந்த மாத்ரு சக்தி பெண் துறவிகளுக்கான மாநாட்டில் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொள்ள வந்தார் அவருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் காவல்துறையினரின் மரியாதையையும் ஏற்றுக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு சாதனைகளை புரிந்த பெண்களுக்கு விருதுகளையும் வழங்கினார்
பின்னர் விழாவில் புதுவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில் காவி தான் ஆன்மிகம் ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை வருங்காலத்தில் தமிழில்லாமல் ஆழ்வார்கள் இல்லை ஆன்மிகமும் தமிழும் இணைந்தது தமிழ்நாடு காவியைவிடுத்து தமிழக கலாச்சாரம் இல்லை ஆன்மிகத்தைவிடுத்து தமிழக கலாச்சாரம் இல்லை ஆனால் ஆன்மிகத்திற்கு தமிழுக்கும் சம்பந்தமில்லாத சூழ்நிலையை சில பேர் உருவாக்குகின்றனர் ஆனால் பலம் பொருந்திய காவி துறவி பெண்கள் வணங்குகிறேன் என்று பேசினார்.
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாலாறு புஷ்கருமா பாலாறு ஆராதணை செய்கின்றனர். நதிகளை வணங்குவது நீர்நிலைகளை பாதுகாக்கும் எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்ததான் இது நடக்கிறது. இளைஞர்களும் பெண்களும் இதை பின்பற்றுவார்கள்.
இதனைதான் பிரதமர் அவர்கள் தூய்மை பாரதம் என வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் சிவசேனா ஆளுநர் குறித்து குற்றாச்சாட்டை கேட்டதற்கு - ஆளுநர்கள் எந்த கட்சியையும் உடைக்கவில்லை அவர்களாகவே தங்களுக்குள் உடைந்துவிட்டு ஆளுநர் மீதுகுற்றம்சாட்டுகின்றனர்.
மாநில சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் ஆளுநர்களும் அரசியல் சட்டத்தின் படி தான் நடந்துகொள்கின்றனர் ஆனால் குற்றம்சாட்டுபவர்கள் தான் ஆளுநர்களை அவ்வாறு பயன்படுத்தினார்கள் ஆனால் தற்போதைய ஆளுநர்கள் சட்டத்திற்குட்பட்டு நேரமையாக நடந்துகொள்கின்றனர் என்று பேசினார்.