முதல்வர் கண்டு பிடித்தார்!அமைச்சர் கீதா ஜீவன் ஓடோடி வந்தார்!!

ஜி.கே.சேகரன்,
நேற்று இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்குள் ஆய்வுக்காக திடீரென்று நுழைந்த முதலமைச்சர், அங்கு பணியில் இல்லாத மூவர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது பற்றின செய்தி "லைவ்லுக்.இன்" டிஜிட்டல் மீடியாவில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஓடோடி வந்தார்.
அவருடன்- தமிழக கைத்தறி மற்றும் தொழில் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு பணியாளர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
அப்பொழுது மாணவர்களின் வகுப்பறைகள் மாணவர்கள், தங்கும் விடுதிகள் சத்துணவுக்கூடம் போன்றவற்றை ஆய்வுகள் செய்தனர். மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரங்களை குறித்தும் உணவு பொருட்களை குறித்து பார்வையிட்டு பணியாளர்களிடம் விசாரித்தவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் படுக்கை அறையில் பொருட்கள் மற்றும் கல்வி புத்தகங்கள் போன்றவை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூகநல மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது பணியில் இல்லாத அவர்கள் மீது விசாரணை செய்யுமாறு உத்தரவு தெரிவித்திருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்றதாகவும் விசாரணையில் பணி நேரத்தில் இல்லாததற்கான காரணம் குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெற கூடாது என எச்சரிக்கை செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் கடந்த 2008 முதல் 2022 வரை 17240 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் குழந்தை திருமணம் குற்றத்திற்காக 1399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கான வழக்குகளையும் அரசே நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டில் மட்டும் குழந்தை திருமணம் குற்றத்திற்காக 766 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசு பள்ளிகளில் மற்றும் அரசு துறைகளில் மூலம் பல்வேறு புகார் எண்கள் மற்றும் விழிப்புணர்வு பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக தற்போது குழந்தை திருமணங்கள் கணிசமாக குறைந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய நபர் மாணவர்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஏற்படுத்தியதன் காரணமாக போஸ்கஸோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், ஆசிரியரை பணி நீக்கம் செய்யப்படுவார் என சொன்னார்.