திமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கு எதிராக ம.ம.க. கோஷம்!

ஜி.கே.சேகரன்,
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியினர் (ம.ம.க.) வேலூரின் மையப்பகுதியில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் திமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கு எதிராக கோஷங்களை முழங்கி, ராஜினாமா செய்ய கோரினர்.
வேலூரில் மனித நேய மக்கள் கட்சியினர் சி.எம்.சி மருத்துவமனையின் அருகே சாலைமறியல் நடத்தினர்.
இந்த மறியலை நடத்தப்போவதாக நேற்றைய தினமே அக்கட்சியினர் அறிவிப்பு செய்தனர்.
ஆனால் அதை சம்மந்தப்பட்ட பகுதியின் காவல் நிலைய அலுவலர் ஊதாசீனப்படுத்தினார், அதன் எதிரொலியாக இன்று மறியலும், ஆளுங்கட்சிக்கு எதிரான குரலும் ஓங்கியது.
ஏன் இந்த ஆர்பாட்டம்,
வேலூர் மாவட்டம்,வேலூரில் போகிபேட்டை பகுதியில் தங்கும் விடுதிகள் வியாபார கடைகள்,குடியிருப்புகள் மற்றும் மசூதியும் உள்ளது.
இந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்,எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். அவர்கள் நேரில் சென்று பார்த்த பின்னரும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த அடைந்த மனித நேய மக்கள் கட்சியினர் நேற்று 25.11.2021 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதில் 26 ஆம் தேதி மாலை சி.எம்.சி மருத்துவமனையின் அருகில் 4 சாலை மறியல் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர்.
இது குறித்து போலிசார் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.
இந்நிலையில் அவர்கள் அறிவித்தபடி மேற்படி கட்சியினரும், சிறார்களும் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசைக்கண்டித்தும் அவர்கள் ராஜனாமா செய்ய கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த மறியல் நடக்குமிடத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் தான் காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு போக்குவரத்து போலிசார் தகவல் கொடுத்த பின்னரே அலறியடித்து ஓடிவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் அந்த நிலையத்தில் அலுவலர் ஆர்பாட்டக்காரர்களிடம் குரலை உயர்த்தி பே சவே அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஆர்பாட்டக்காரர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் பிரச்சணைக்கு தீர்வு காண்பதாக காவல் அலுவலர்கள் உறுதியளித்தனர் இதனையடுத்து ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சீர்படுத்துவதாக சொல்லி இப்போது ஓடிவிட்டார்.
எட்டு நாட்கள் தான் பார்ப்போம், அதற்க்குள் போகிப்பேட்டையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி பாதையை சீர்படுத்தவில்லையெனில் மாநகராட்சியை முற்றுகையிடுவோம் என்றனர்.
இந்த மறியலால் சுமார் ஒருமணிநேரம் போக்கு வரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியே திமுகவின் மீட்பு நடவடிக்கை சரியில்லை என அரசைக்கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமரன் ஒருவர் தெரிவிக்கையில், மறியல் குறித்து தகவல் அறிந்த காவல் துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களைப் போன்ற பாமரர்கள் இப்படி போக்குவரத்தில் சிக்கியிருக்க மாட்டோம் என்றார்.
அவர் சொல்வதும் சரிதானே.