எம்.எல்.ஏ இதுவரை ஏதாவது செய்துள்ளாரா? எதிர்கோஷ்டி கேள்வியால் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
மாதனூர் ஊராட்சியில் ஊராட்சி பொது நிதி 4.50 கோடி ரூபாயை ஒன்றரை ஆண்டு காலமாக முறையான வரவு செலவு கணக்கு காண்பிக்காமல், ஒன்றிய குழு தலைவர் முறைகேடு செய்வதாக கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு - ஊராட்சிகளின் இணை இயக்குனரை எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய குழு தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் டெண்டர் தொடர்பாக வைக்கப்பட்ட தீர்மானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எம்எல்ஏ வில்வநாதன் ஆதரவு கவுன்சிலர்கள் 10 க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரகளை செய்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊராட்சி பொது நிதி 4.50 கோடியில் இருந்து முறையான வரவு செலவு காண்பிக்காமல் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் முறைகேடு செய்து வருவதாக கூறி ஊராட்சிகளின் இணை இயக்குனர் விஜயகுமாரியிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமாரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறுக்கிட்டு டெண்டர் விடப்பட்டதை நிறுத்த முடியாது தங்கள் ஊராட்சிகளில் 8 மாத காலமாக எந்த பணியும் செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை எம்.எல்.ஏ இதுவரை ஏதாவது செய்துள்ளாரா? என கேள்வி எழுப்பியதால் இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய குழு தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் வைக்கப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.