மருத்துவ படிப்புக்கு பின் பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்க கூடாது! வேலூர் ஆட்சியர் அட்வைஸ்!

கு.அசோக்,
கல்வியில் இறுதி இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் ஒரு இடம் முன்னேறியுள்ளது - மாணவர்கள் பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளை படித்துவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பிறகு பொருளாதாரம் ஈட்டும் எண்ணம் வரவேண்டும் - மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் பேச்சு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கல்வித்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பது குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் ஆதிதிராவிட நல அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ,மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.
இதில் பேராமெடிக்கல் கணினி சார்ந்த படிப்புகள் பொறியியல் ,ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட சட்டம் உள்ளிட்ட பல படிப்புகள் படிப்பது ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி கடந்த ஆண்டு இறுதி இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் 2 சதவிகிதத்திற்கும் மேலாக கூடுதலாக தேர்ச்சி பெற்று ஒரு இடம் முன்னேற்றியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் மாணவர்களாகிய நீங்கள் மருத்துவம் படித்தால், படித்து முடித்து நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் அவர்களிடம் பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்க கூடாது.
மேலும் பொறியாளராக இருந்தால் நல்ல தரமான கட்டிடத்தை உருவாக்க வேண்டும் படித்து முடித்து என்ன நல்ல நிலைக்கு சென்றாலும் மக்களுக்கு சேவையாற்றுவதையே முதலாவதாக இருக்க வேண்டும்.
அதே போல் பொருளாதாரத்தை ஈட்டுவது இரண்டாவது தான் என பேசினார்