காணொளி மூலம் ஒரு லட்சம் இ.பி.கனெக்க்ஷன்!

காணொளி மூலம் ஒரு லட்சம் இ.பி.கனெக்க்ஷன்!

கு.அசோக்,

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டார்.

 பின்னர் காணொளிகாட்சி வாயிலாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.

 இந்நிலையில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய பெருமக்களுக்கு காணொளி  மூலம் வழங்கும் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  வேலூர்.

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு காணொளி வாயிலாக வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

 இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் வேலூர் காட்பாடி,அனைக்கட்டு குடியாத்தம்,கேவிக்குப்பம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மின் இணைப்புக்காக விண்ணப்பித்த விவசாயிகள் காணொளி நிகழ்வில் பங்கேற்றனர்.

  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் விவசாயிகளிடம் கலந்துரையாடினார் விவசாயத்திற்கு மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருந்த விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு மின் சாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்டத்தில் 1225 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது விவசாயிகள் பயனடைந்தனர்

 திருப்பத்தூர் மாவட்டம்

   திருப்பத்தூரில் ஓரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதல் அமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும்  மின் உற்பத்தி பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் இணைந்து முதலமைச்சரின் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை கழக அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து உரையாடினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.