காங்கிரஸை ஆக்கிரமிக்கும் பிரசாந்த் கிஷோர்! அரசியல் பரபர!!

காங்கிரஸை ஆக்கிரமிக்கும் பிரசாந்த் கிஷோர்! அரசியல் பரபர!!

ம.பா.கெஜராஜ்,

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கோட்டையில்  வலுவான இடத்தை பிடித்துக் கொண்டு 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள எம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறார்.

 தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லுநரான பிரசாந்த் கிஷோர்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்டோருடன் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குட்டத்தில் பங்கேற்றார்.

  இந்த ஆலோசனைக் கூட்டம்  சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது.

 அப்போது இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வியூகத்தை சமர்ப்பித்தார். 

   கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை  சந்தித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 2024 தேர்தல் வியூகம் குறித்த விரிவான விளக்க அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் பிரசாந்த் கிஷோர் அளித்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதில் செயல் திட்டம் இடம் பெற்றிருப்பதையும் சொன்னார்.

  இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும், அதன்பின்னர் கட்சியின் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டார்.

 காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வரையறுத்துள்ள வியூகத்தைகாங் கட்சி ஒப்புக் கொண்டிருப்பது அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

 2024  மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல் மந்திரி  மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல் மந்திரி  சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் ஏற்கெனவே இறங்கியுள்ள நிலையில்

திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.