ஏடாகூட ஊராட்சி தேர்தல்! பிரச்சனை வலுக்கிறது!!

ஏடாகூட ஊராட்சி தேர்தல்! பிரச்சனை வலுக்கிறது!!

  கு.அசோக்,

 ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமன்தட்டு,சீக்கஜோனை,உள்ளிட்ட மலை  கிராமங்களில் எஸ்.டி.சமுகத்தைச் சேர்ந்த 2889 வாக்காளர்களும்,பொதுப்பிரிவினர் 551 வாக்காளர்கள் என மொத்தம் 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

 இந்த நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பெரும்பான்மையாக வசித்து வரும்  (எஸ்.டி)  சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இட ஒதுக்கீடு அளித்து வரப்பட்டது.

  அப்படியிருக்க, ஊராட்சியில் ஒருவர் கூட இல்லாத சமூகத்தை சேர்ந்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.

 இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று தேர்தல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது காமனூர்தட்டு மலை கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையத்தினை சுத்தம் செய்யும் பணிகளை, தூய்மை பணியாளர்கள் செய்து வந்தனர்.

 இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்துமதிக்கு ஆதரவாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி சித்ரா, வேல்முருகனின் தம்பி மனைவி செல்வி, ஆகியோர் மீது அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

 அதில் 3 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

 காயமடைந்த 3 பேரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 ஆம்பூர் அருகே மலைக்கிராமத்தில் வழக்கத்துக்கு மாறாக நடைபெற உள்ள  உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவது குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடியால் அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

5.