விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன்!புதிய ஆளுநர் பேட்டி!

விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன்!புதிய ஆளுநர் பேட்டி!

ம.பா.கெஜராஜ்,

  தமிழ்நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்காக அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்ற ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

  பதவி ஏற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி, வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார்.

  பின்பு பேசிய அவர், " பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைபடுகிறேன். பழமையான தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன்.

 அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பாக உள்ளது'' என தெரிவித்தார்.

   ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள 500 பேர்களுக்கு மட்டுத் மே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இதில் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சிதலைவருமான பழனிசாமிக்கு ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.