ஆர்பாட்டக்காரர்களிடம் மோதிய போலிஸ்!

ஆர்பாட்டக்காரர்களிடம் மோதிய போலிஸ்!

கு.அசோக்,

 நகராட்சியை கண்டித்து இந்து முன்னணி மற்றும் பொது மக்கள் போராட்டம்  - காவல்துறையினருக்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளுஸேற்பட்டது.

 வேலூர் மாவட்டம்,குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.     

 கோவில் பணத்தை கோவிலுக்கு செலவு செய்ய விடாமல் கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் நகர மன்றத் தலைவரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

 அதில், வழிபாடு விஷயங்களில் நீதிமன்றமே தலையிடக் கூடாது ஆனால் நகரமன்ற தலைவர் தலையிட அதிகாரம் இல்லை எனவும், ஒரு தீர்மானம் பிறகு ஒரு தீர்மானம் என்று நிறைவேற்றி மக்களை ஏமாற்றும் நகர் மன்றத் தலைவரை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

 கோவிலில் பக்தர்கள் போடும் காணிக்கை தான் கோயிலின் வருமானம், இந்து சமய அறநிலையத்துறைக்கு என தனி வருவாய் கிடையாது  குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவிற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

 இலவசமாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும், நகராட்சியில்  நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத தீர்மானத்தை ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும். குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 கோவிலுக்கான கடைகளை ஆன்லைனில் ஏலம் விடுவதால் சாதாரண கடைகள் அத்தியாவசிய கடைகள் வரை அனைத்து கடைகளின் நபர்கள் படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள்தான் கடைகள் போடுகிறார்கள்.

 அவர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத நிலையில் வியாபாரிகளை ஏமாற்றும் நிலை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் பேரணாம்பட்டு பள்ளிகொண்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தால் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்தை தடுக்க காவல்துறையினர் முயன்று அடாவடி செய்ததால், ஆர்பாட்டம் செய்வதர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.