ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மகன் போட்டி!

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மகன் போட்டி!

முரளிதரன்,

 தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

இதற்கான வேட்புமனு கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 

 அப்படியிருக்க, தற்போது மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கலை இருவரும் தாக்கல் செய்தனர்.

  பங்காரு அடிகளார் அவர்களின் மனைவி லட்சுமி இதற்கு முன் 2 முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், இவர்கள் போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், தற்போது மேற்படி குடும்பத்தினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.