குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிக்கும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ!

டி.முகமது இஃர்பான்,
வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்டம்
நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் திம்மாம்பேட்டை ஏ.என். மஹாலில்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க.தேவராஜி தலைமை ஏற்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
கே.என்.நேரு,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இடையே ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளருமான க.தேவராஜ் தினம் ஒரு கெட்டப்பில் தோன்றி வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது குதிரை வண்டி ஓட்டியவாறு பரபரப்பாக வாக்கு சேகரித்தார்.
இதை வாக்களர்கள் பெரிதும் வரவேற்றனர்.