பெண்களை முடக்கிப் போட்ட போலிஸ்!கோவில் அருகே கட்சிக் கொடி? இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்... கைது!!

  கு.அசோக்,

  நேற்று இரவு, கேவிக்குப்பம், பாறைமேடு கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவிலின் அருகில் திமுக கொடி ஏற்றி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

   இன்றும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் அதற்கென அங்கு குழுமிய இந்து முன்னணியினரை போலிசார் கைது செய்திருக்கிறார்கள். கைதானவர்களில் கோட்ட அமைப்பாளார் மகேஷிம் அடக்கம்.

  இந்த சூழலில் அங்கு திமுக கொடி ஏற்றப்படுவதால் பரபரப்பு காணப்படுகிறது.

  வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியம் பாறை மேடு கிராமத்தில் 200 ஆண்டு பழமையான அம்மன் கோவில் அருகில் திமுக கொடி ஏற்றி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் நூற்றுகணக்கானோர் தர்ணா போராட்டம் செய்தனர்.

 காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தை என்று கூறி திமுக ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக இந்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

  இது குறித்து இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் மகேஷ் தெரிவிக்கையில், 200 ஆண்டுகளாக உள்ள கோவிலுக்கு அருகே திமுக கொடி ஏற்றுவதற்கு ஒருநாளைக்கு முன்னரே சாலை முழுவதும் மின் விளக்கு, ரேடியோ போட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

 சம்மந்தப்பட கிராமத்துக்குள் நூற்றுக்கணக்கான போலிசார் இன்று காலையிலேயே நுழைந்து விவசாய கூலி வேலை செய்யும் பெண்களை முடக்கி வைத்திருக்கிறார்கள்.

 கிராமத்திலிருந்து வெளியில் யாரும் செல்லக்கூடாது என்று கிராம பெண்கள் மீது அதிகார வலிமையை பிரயோகித்துள்ளனர்.

 இது குக்கிராம என்பதால் இந்த விஷயம் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது.

 கிராம மக்கள் விரும்பாத ஒரு இடத்தில் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து கொடி ஏற்றவில்லையென்றால் என்ன ஆகிவிடப்போகிறது.

  காவல் துறையினர், ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பெண்களை கிராமத்திலிருந்து வெளியே போக விடாமல் தடுத்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க பணியை துவக்குவோம். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்றார் மகேஷ்.