பெண் மாவோயிஸ்ட் பிரபா திருப்பத்தூர் கியூ பிரிவில் சரண்!தமிழக காவல்துறையை நம்பியதால் சலுகை! டி.ஐ.ஜி. பாபு பேட்டி!

ஜி.கே.சேகரன்,
நோய் வாய்பட்ட பெண் மாவோயிஸ்ட் பிரபா திருப்பத்தூர் கியூ பிரிவு போலிசார் வாயிலாக அம்மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்கள் முன்னிலையில் சரணடைந்தார்.
கர்நாடக மாநில மாவோயிஸ்ட் மாநில குழு உறுப்பினரான பிரபாவுக்கு தமிழக அரசின் மறுவாழ்வு அடிப்படையில் சலுகைகள் அனைத்தும் வழங்கபடும் என காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி.பாபு,இ.கா.ப. அவர்கள் பேட்டி அளித்தார்.
வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் ஏ.ஜி.பாபு முன்னிலையில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பிரபா (எ) சந்தியா ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தியா, பிரபா மட்டுமின்றி பல்வேறு பெயர்களின் இவர் அழைக்கப்பட்டார்.
இவருக்கு தற்போது பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதாலும், மேற்குதொடர்ச்சி சிறப்பு மண்டல குழு மாவோயிஸ்ட் பொறுப்பாளரான அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டதாலும் பிரபா சரண்டர் முடிவை எடுத்துள்ளார்.
அப்படியிருக்க, மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகிய பிரபா,தீவிரவாத நடவடிக்கையை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
மேற்படி கிருண மூர்த்தி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிஐஜி, ஏ.ஜி பாபு அவர்கள், தெரிவிக்கையில் பிரபா மீது கர்நாடக மாநிலத்தில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்துமே குறிப்பிடும்படியான வழக்குகள் ஆகும்.
சரணடைந்த பிரபா கர்நாடக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்.
மேலும், பிரபாவுக்கு தமிழக அரசின் சார்பில் இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும், மாத உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கவும் முடிவு வழங்கப்படும்.
தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை கொண்டு இவர் தமிழக காவல்துறை முன்னர் சரணடைந்தார் என்று டி.ஐ.ஜி பாபு கூறினார்.