தோழரை சாகடித்துவிட்டீர்களே! காக்கிகளை கண்டு குமுறிய  இந்திய கம்யூனிஸ்டுகள்! 

 ஜி.பாலகுரு,

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார் அல்லவா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி கும்பல் மீது காவல்துறையிடம் புகார்கொடுத்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருக்கமாம் என சந்தேகம் எழுந்ததாக முதலில் தெரியவந்தது.

 திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் நடேச.தமிழார்வன்.இவர் இந்திய கம்யூனிஸ்ட்

கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றிவருகிறார்.

 இவர் கட்சி பணி மட்டுமின்றி,பொதுமக்களின் பல்வேறு பொது பிரச்சனைகளுக்காக போராட்டகளத்தில் குரல் கொடுத்து கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரிடம் நன்மதிப்பை பெற்றவர்.

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைவதியீல் பூவனூர் கிராமத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞர் இருவரை கடுமையாக தாக்கி நிர்வாணப்படுத்தி ரவுடிதனம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

   இதனைஅவ்வழியாக தனது கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்த நடேச தமிழார்வன் தட்டிகேட்டதோடு ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நீடாமங்கலம் காவல் துறையினர் கஞ்சா வியாபாரி ரவுடி ராஜ்குமாரிடம் தகவல் கொடுத்ததாக

கூறப்படுகிறது.

 இத்தகைய சூழலில் நேற்று மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 8பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  அவரது பைக்கை. இடைமறித்து நடேச தமிழார்வனை கீழேதள்ளிவிட்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிபடு கொலை செய்த கும்பல் தப்பினர்.

இதில் சம்பவ இடத்திலேயே நடேச.தமிழார்வன் இரத்த வெள்ளத்தில்உயிரழந்தார். 

 இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து நடேச தமிழார்வன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

 எனவே திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்தபடுகொலை சம்பவத்தின் பின்புலத்தில் நீடாமங்கலம் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், படுகொலை நடந்த இடத்தில் செயல்பாட்டில் இருந்த சிசிடிவி கேமராசெயல்படாமல் இருப்பதாக காவல்துறை கூறியுள்ளதை தோழர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

  கஞ்சாவியாபாரியான ரவுடி ராஜ்குமார் மீது கொலையுண்ட நடேச தமிழார்வன் கொடுத்த புகார் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போன்ற சம்பவங்களை சுட்டிக் காட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நீடாமங்கலம் காவல்துறை மீது தங்களது சந்தேகத்தை பதிவு செய்துள்ளனர்.

 அநீதிக்கு எதிரான தோழரை சாகடித்து விட்டீர்களே என்று பாதுகாப்பு பணிக்கு வந்தவர்களை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். 

 மாவட்டம் முழுவதுமுள்ள காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருக்கும் போது நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் இல்லாதது கொலையில்

ஆய்வாளர்க்கு உடன்பாடு இருந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக அரசியல் கட்சியினர்தெரிவித்தனர்.

 இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பூவனூர் ராஜ்குமார், மாதவன், மனோஜ், சேனா (எ)சேனாதிபதி மற்றும் எழிலரசன் ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.

  கூலிப்படையை ஒழிக்க மாநில காவல் துறை என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும்  இன்ஸ்.... முருகேசன் போன்றவர்களின் கூடா நட்பால் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்குதே என்பது பலரின் கவலை.