காட்பாடியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது!

காட்பாடியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா,குட்கா,பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துக் கொண்டிருந்தது. அதை தடுத்து பிடிக்கும் விதமாக வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 இதனை அடுத்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் டிஎஸ்பி இளங்கோ, இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் அருண், மோகன் மற்றும் காவலர்கள் சீனிவாசன், மதன்குமார், சாந்தி ஆகியோர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 10 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது.

 அப்போது அவர் 10 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்னர். இந்நிலையில் கஞ்சா கடத்திய சதீஷை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

 எல்லாம் சரி காட்பாடியிலுள்ள சித்தூர் பஸ்ஸ்ட்டேண்டிற்கு ஏன் அதை எடுத்து வந்தாராம்?