பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்! மறியல் பரபரப்பு!

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்! மறியல் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை! சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம்

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே மட்டரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா(27).கட்டட தொழிலாளி. இவர் கோயம்புத்தூர் மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் அஞ்சாமணி இவர்களின் இளைய மகள் ஆதிலட்சுமி(22).

 மேற்படி இதுவருக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு  முன்பு  சத்தியமங்கலம் பகுதியில் உள்ள நூல் கம்பெனியில் வேலை பார்க்கும் பொழுது காதல் மலர்ந்தது.

  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் மட்டரபள்ளி பகுதியில் வசித்து வந்தனர்.

   பெற்றோர்கள் சமாதானம் அடைந்து மகள் ஆதிலட்சுமிக்கு 20  சவரன் நகை மற்றும்  இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளனர்.

   இவர்களுக்கு குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அடிக்கடி அவரது கணவர் மற்றும் மாமியார் மாமனார் ஆகியோருடன் குடும்ப சண்டை நடந்துள்ளது.

  இந்நிலையில், சம்பவதன்று ஆதிலட்சுமி சமையல் செய்வதில் தாமதபடுத்தியதாக கூறி சண்டையிட்டு உள்ளனர் என்று கூறப்படுகின்றது.

  இதனால் ஆத்திரமடைந்த சூர்யா ஆதிலட்சுமி திட்டியுள்ளார்.  விரக்தியடைந்த ஆதிலட்சுமி  வீட்டில் ஒரு அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

  பெண்ணின் உறவினருக்கு தகவல் அளித்து, திருப்பத்தூர் கிரமிய  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தகவலின் பெயரில் ஆதிலட்சுமி பிரேத உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

   பெண்ணின் உறவினர்கள் சாவில் சந்தேகம்  இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

   தகவல் அறிந்து சம்பவ இடத்தை விரைந்து வந்த போலீசார்உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறியதின் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

மேலும் திருமணமாகி   இரண்டு ஆண்டுகள் ஆவதால்,இந்த விசாரணை திருப்பத்தூர் சப் கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.