கஞ்சா ரெய்டு நடத்திய ஆய்வாளர் பேபி!

ஜி.கே.சேகரன்!
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை சேர்ந்த வாலிபர் கைது
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் காளஹஸ்தியிலிருந்து வேலூரை நோக்கி வந்த அரசு பஸ்சை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுப்பிடிக் கப்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் மதுரை மாவட்டம் உசலிம்பட்டி தாலுக்கா கல்லப்பட்டி காலணி பகுதியைச் சேர்ந்தவர் சின்னன் (22) என்பதும், அவர் 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.