89 வீச்சறிவாள்கள் பறிமுதல்! நால்வர் கைது!

டி.முகமது இர்பான்,
ஒரு காரில் கடத்தப்பட்ட 89 வீச்சறிவாள்களை போலிசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
மும்பையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள துலே நகரை நோக்கி சென்ற காரில் ஆயுதம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை விரட்டிச் சென்று ஷிர்பூர் பகுதியில் வழிமறித்தனர். பின்னர் காரை சோதனை செய்ததில் அதில் பெண்டல்களில் வாள்கள் இருந்தது.
அதில் இருந்த மொத்தம் 89 வாள்களை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் முகமது ஷபீக் (35), ஷேக் இலியாஸ் ஷேக் லத்தீப் (32), சையத் நைம் சையத் ரஹீம் (29), கபில் தபாதே (35) ஆகியோர் என்று துலே காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டவர்களுக்கு எதிராக ஆயுதச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கோங்கிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீச்சறிவாள்கள் எங்கு தயாரிக்கப்பட்டது, எதற்காக எடுத்துச் செலப்படுகிறது என்று போலிசார் விசாரிக்கிறார்கள்.