அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே பிரசவம் பார்த்த நர்சு:- பெண் பலி!

அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே பிரசவம் பார்த்த நர்சு:- பெண் பலி!

   ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மதன் ஜோசப், இவரது மனைவி சங்கரி இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் ஆகின்றது.

 அப்படியிருக்க சங்கரி கர்ப்பம் அடைந்து இரட்டைக் குழந்தைகளை சுமந்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 அப்போது அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் செவிலியர்களே சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த செவிலியர் செல் போன் பேசிக்கொண்டே பிரசவம் பார்த்ததாகவும்  கூறப்படுகிறது.

  இந்நிலையில் மருத்துவமனையில் சில மணி நேரத்திலேயே சங்கரி மூக்கு பகுதியில் ரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளார்.

 தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயிரிழந்த சங்கரியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் போராட்டத்தை கைவிட்டு சட்டரீதியாக செல்லலாம் என அவர்களை திசை திருப்பி வருவதாக கூறப்படுகிறது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களின் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 எப்படியாயினும் சம்மந்தப்பட்ட டுயூட்டி டாக்டரையும் நர்சையும் விசாரணைக்கு ஆட்படுத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஏழை எளியோரின் அவா?