இவர் தாங்க பேராசிரியர்! இங்கும் இருக்கே புடுங்கி திண்ணிகள்!!

ம.பா.கெஜராஜ்,
நாடெங்கிலும் நிலவிய கொரோனா காலத்தில் 3 வருடங்கள் பாடங்கள் எதுவும் எடுக்காததால் ரூ. 24 லட்சம் சம்பளத்தை திருப்பி கொடுத்து உள்ளார் ஒரு பேராசிரியர். சத்தியமா இது தமிழகத்தில் நடக்கவில்லைங்க.
இது பற்றின விவரம் வருமாறு,
பீகாரின் மாநிலம், முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார், அவரது பெயர் லாலன் குமார் (வயது 33).
மேற்படி கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் (பிராபு) கீழ் செயல்பட்டு வருகிறது.
அப்படியிருக்க லாலன் குமார் 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததில் இருந்து அவர் பெற்ற மொத்தச் சம்பளமான ரூ. 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்து உள்ளார்.
அதாவது பல்கலைக்கழக பதிவாளரிடம் குமார் ரூ.23,82,228 காசோலையை வழங்கினார். இதுகுறித்து லாலன் குமார் கூறியதாவது:- பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட (கொரோனா தொற்றுநோயின் போது), இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர்.
ஐந்து வருடங்கள் கற்பிக்காமல் சம்பளம் வாங்கினால் எனது கல்வி மரணமடைந்ததற்கு சமமாகும் என கூறினார். சேச்ச்சே எவ்வளவு நல்ல மனுஷன் இங்கேயும் இருக்குதுங்களே என்று சொல்ல தோன்றுகிறது.
குறிப்பு:- வெயிலூரில் சிறுபாண்மை என்கிற பெயரில் ஒரு கல்லூரி செயல்படுகிறது. அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆள் பொறுப்பு முதல்வராக நியமமானான், அப்போது பணியில் இருந்த போது ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி குடி, கூத்தி என்று இருந்துவிட்டதால் அந்த பணத்தை அது திருப்பி தரவேயில்லை. இந்நிலையில் அந்த ஜென்மம் ஓய்வு பெற்று பணிக்கொடைகளை அள்ளி சென்றுவிட்டது. இப்போது வரை அந்த அப்பாட்டக்கரிடமிருந்து அந்த ஒரு லட்சத்தை நிர்வாகம் வசூலிக்கவேயில்லை.
இதை வைத்து பார்க்கும் போது, பீகார் பேராசிரியர் லாலன் குமாருக்கு பெரிய சல்யூட் அடிக்கலாமே.