அய்யய்யோ சிதம்பரம் கோவிலில் அக்ரமம் நடக்கிறது: அமைச்சர் சேகர் பாபு சாடல்!

அய்யய்யோ சிதம்பரம் கோவிலில் அக்ரமம் நடக்கிறது: அமைச்சர் சேகர் பாபு சாடல்!

 ஜி.சாந்தகுமார்,

     சிதம்பரம்நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெறுவருவதாக அமைச்சர் சேகர்பாபு சாடினார்.

சென்னையிலுள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதுச்சேரி ஆளுநர் அவமதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஊடகங்கள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.

   சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருகிறது. அங்குள்ளவர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வருகிறது.

  தமிழக அரசு ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைக்கும் நிலை உள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுப்போம்” என சொன்னார்.