அரசாணை 149 ரத்து செய்ய கோரி ஆர்பாட்டம்!

அரசாணை 149 ரத்து செய்ய கோரி ஆர்பாட்டம்!

  கு.அசோக்,

 தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்யகோரியும் அரசாணை 149 ரத்து செய்ய கோரி -ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிகமாக பணியில் உள்ள 30 ஆயிரம் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரி -ராணிப்பேட்டையில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

  இராணிப்பேட்டை மவாட்டம், இராணிப்பேட்டையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 9 ஆண்டுகாலமாக தற்காலிக பணி செய்து வரும் ஆசிரியர்கள் ரவி தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த2013 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு புதியதாக தற்காலிக ஆசிரியர்க்ளை நியமிக்கின்றனர்.

 இதனை ரத்து செய்ய கோரியும் அரசாணை 149 ரத்து செய்ய கோரியும் தமிழக முதல்வர் தேர்தலின் போது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிட கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.