பூமி பூஜையை தடுத்த தருமபுரி எம்.பி.யை தலைமை கண்டித்ததா?
எஸ்.முனியசாமி,
அரசு திட்டத்துக்காக பூமி பூஜை போட முயன்றதை தருமபுரி எம்.பி.தடுத்து அதிகாரியை வெளுத்துக்கட்டினார். இதற்காக தலைமை அவரை கண்டித்ததா? என்கிற விணா எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ரு.1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை துவக்கி வைக்க தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவில், பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர். இதைக்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என உங்களுக்கு தெரியாதா? என்றும் இதுகுறித்த விதிமுறைகள் வழங்கவில்லையா? என்றும் ஆவேசமாக கேட்டார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை சார்பில் புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், கற்பூரம், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட எம்.பி செந்தில்குமார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அதிகாரியை அழைத்து, அரசு விழாவில் இதுபோன்ற மத சடங்குகள் செய்யக்கூடாது என்ற வழிக்காட்டல் உங்களுக்கு தெரியாதா? இந்து மதத்தினர் மட்டும் உள்ளனர் கிறிஸ்துவர், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்.
“இது இந்து மத ஆட்சி இல்லை, திராவிட மாடல் ஆட்சி” என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள் என்று ஆவேசமாக கூறினார். நிகழ்ச்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மன்னிப்பு கேட்ட பிறகு எம்.பி ஆவேசமாக பேசினார். சிறிது நேரத்திற்கு பிறகு மத சம்பிரதாய பொருட்களை அகற்றிவிட்டு புனரமைப்பு பணிகளை எம்.பி செந்தில்குமார் துவக்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதே கையோடு, இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை செந்தில்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில்
தருமபுரி எம்.பியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
அரசு விழாக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற தருமபுரியின் துணிச்சலான செயல் பாராட்டத்தக்கது என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பாராட்டு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் எம்.பி செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் திமுக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் பலரும் தருமபுரி எம்.பியின் செயல் நாடகம் என விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு உதாரணம் எனக் கூறி கோயில் திமுக அமைச்சர்கள் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசு விழாக்களில் இந்து முறைப்படி நடைபெறும் பூஜை தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு இது தான் திராவிட மாடலா? என்று கேலி கிண்டல் செய்துள்ளனர். ஒரு சிலர் தருமபுரி எம்.பி கோயில் கும்ப மரியாதையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்த புகைப்படம் குறித்த விபரங்கள் தெரியவில்லை.
அதோடு, தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் அம்மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் எம்.பி செந்தில்குமாரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இந்து மதத்தையும், இந்து மத சடங்களையும் திமுக அரசு இழிப்படுத்தி வருவதாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், எம்.பி செந்தில்குமாரின் செயல்பாடு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சொந்தக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறியதாகவும் அதனால், கட்சித் தலைமை அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.