தூக்கியடிக்கப்பட்ட கலெக்டர்-எஸ்.பி. மற்றும் கல்வி அதிகாரி! கள்ளக்குறிச்சி கலவரம் ரியாக்ஷன்!

தூக்கியடிக்கப்பட்ட கலெக்டர்-எஸ்.பி. மற்றும் கல்வி அதிகாரி! கள்ளக்குறிச்சி கலவரம் ரியாக்ஷன்!

   ம.பா.கெஜராஜ்

  கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து அம்மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை பலதரப்பட்டவர்கள் விமர்சனம் செய்தார்கள்.

குறிப்பாக மூத்த பத்திரிகையாளர்கள் தராசு ஷ்யாம் மற்றும் மணி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  ஒரு மாநில டிஜிபியும் முதன்மை செயலாளரும் மாவட்டத்துக்கு நேரில் சென்று கலவரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள் என்றால் அந்த அளவுக்கு மாவட்ட நிர்வாகத்தினரால் செயல்படமுடியவில்லையா. இதை அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ஒரே வாரத்தில் இரண்டு கலவரம், ஒன்று தலைநகரில் நடக்கிறது, ஒருமணிநேரம் நின்று கலவரம் செய்கிறார்கள், இரண்டாவது நான்கு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த கள்ளக்குறிச்சி கலவரம்.

  இதெல்லாம் நாட்டுக்கு நல்லதல்ல, கள்ளக்குறிச்சியைத் தவிர பக்கத்து மாவட்டங்களிலிருந்தெல்லாம் இளைஞர்கள் டூவீலரில் வந்துள்ளார்கள். இதற்காக மூன்று நாட்களாக வாட்ஸாப்பில் ஆள் பிடித்திருக்கிறார்கள், உளவுத்துறை தில் பெயிலியர் ஆகியிருக்கிறது. இந்த விமர்சனத்தை அரசுக்கு அளிக்கும் ஆலோசனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்களில் அவர்கள் சொன்னார்கள்.

  இந்நிலையில் அம்மாவட்ட கலெக்டராக இருந்த பி.என்.ஸ்ரீதர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சரவணக்குமார் ஜடாவத் என்பவரை வேளாண் துறையிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  அதே போல் எஸ்.பி.யாக இருந்த செல்வக்குமாரை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக பலகலவன் அவர்களை எஸ்.பி.யாக நியமித்துள்ளார்கள்.

 அதேபோல், கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.மேலும் கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்ட்டுள்ளார்.