பட்டாகத்தியால் வெட்டி வீரலட்சுமி சூப்பர் மார்க்கெட் சேதம்!  

பட்டாகத்தியால் வெட்டி வீரலட்சுமி சூப்பர் மார்க்கெட் சேதம்!   

 

  காஞ்சிபுரத்தில் உள்ள வீரலட்சுமி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஹெல்மெட் ரவுடிகள் பட்டா கத்தியால் அங்குள்ள பொருட்களை வெட்டி சேதப்படுத்தினர்.

  சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகள் அண்ணன் தினேஷை பகைத்தால் காஞ்சிபுரத்தில் ஒருத்தனும் உயிரோடு விடமாட்டோம் என்று போகும் போது பட்டாகத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றதால் அங்கு பீதி ஏற்பட்டிருக்கிறது.

  போலிசார் வீரலட்சுமி சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று விசாரித்த போது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டா கத்தியுடன் வந்து பொருட்களை வெட்டி வீசியதாகவும், பணம் எதுவும் கேட்கவில்லை என்றும், நாங்கள் பயந்துவிட்டோம் என்றும் சொல்கிறார்கள்.

 ஆக காஞ்சிபுரத்தில் மீன்டும் ரவுடியிசம் தலை தூக்கிவிட்டது.