கல்லூரியில் மோசடி முதல்வரா?

கல்லூரியில் மோசடி முதல்வரா?

  ஜி.கே.சேகரன்,

வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரியில் நிதிமுறைகேடு - மாணவர் சேர்க்கையில் முறைகேடு - முதல்வரின் அராஜக போக்கினை கண்டித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

  வேலூர் மாவட்டம், ஓட்டேரி பகுதியில் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரி செயல்படுகிறது இதன் முதல்வராக மலர் என்பவர் உள்ளார் இவர் நிதி முறைகேடுகள் செய்வதாக புகார்கள் எழுந்தன.

 அதே போல் முறைகேடான மாணவர் சேர்க்கை ஆசிரியர்களிடம் அராஜக பேச்சு சர்வாதிகார போக்கினை கண்டித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் முனைவர் குமரேசன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.

 இதனை பேராசிரியர் விஜயன் துவங்கி வைத்தார், இதில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

 முதல்வர் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு வருவது கிடையாது இன்று கல்லூரிக்கு வருகிறாரா வரமாட்டாரா என யாருக்கும் தெரியாது?

 இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிப்படைகின்றனர் பேராசிரியர்களை ஒருமையில் பேசி அவர்களை அவமானப்படுத்துவது அரசின் விதிகளுக்கு புறம்பாக மாணவர்களிடம் நிர்வாக கட்டணம் என தலா ரூ.,300 வசூலிக்கின்றார் மேலும் மாணவர் சேர்க்கையில் ரகசியமாகவும் மறைமுகமாகவும் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

 மேலும் கல்லூரி நிர்வாக குழு அனுமதியில்லாமல் ரூ.4.19 லட்சம் கணக்கு காட்டியுள்ளார் மேலும் இக்கல்லூரியில் தொலைதொடர்பு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.40 ஆயிரத்தை வழங்காமல் மோசடி செய்கிறார் மேலும் பழைய மாணவர் சங்க நிதியையும் எடுத்து தவறாக பயன்படுத்துகிறார் இவ்வாறு நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடும் கல்லூரி முதல்வர் மீது விசாரணை நடத்தி துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.