மாணவனை கொலை செய்தவர்கள் வேலூர் கோர்ட்டில் சரண்!

மாணவனை கொலை செய்தவர்கள் வேலூர் கோர்ட்டில் சரண்!

 கு.அசோக்,

 கல்லூரி மாணவன்  கொலை செய்யப்பட்ட வழக்கில் இராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு நான்கு நபர்கள் சரணடைந்தனர்.

  இராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துறை பாபு முன்பு சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த விஜய்(25) திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(21) காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) திருநெல்வேலி வைரமணி (22)ஆகிய நான்கு நபர்களும் நீதிபதி முன்பு கொலை குற்ற வழக்கின் காரணமாக சரண் அடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கின்ற அபினேஷ் (22)என்ற கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான இவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

 

 

 

தமிழக தலைமை ஊடகப்பிரிவு