சி.எஸ்.ஐ. பெண் போதகர் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு!

சி.எஸ்.ஐ. பெண் போதகர் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு!

   பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயத்துக்குட்பட்ட ஆலய பெண் போதகரின் "சாதி" பேச்சால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  இதுகுறித்த விவரம் வருமாறு,

 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ தேவாலயத்தில், பாதிரியார் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், மத போதகர் பியூலா செல்வராணி என்பவர் சிறுமிகளுக்கு பாது காப்பு இனையை பற்றி மைக்கில் முழங்கினார்.

  பெண் பிள்ளைகளுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை, பள்ளிக்கூடத்திலும் பாதுகாப்பு இல்லை. என் வீட்டுக்காரர் ஆசிரியர் தான். அதற்காக நான் உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது.

  நாடார் கடைக்கு செல்லும் பெண் பிள்ளைகளை தொட்டு தான் சில்லரை கொடுப்பார்கள் என்று ரொம்பவே சமூக அக்கறையோடு பேசினார்.

  இதனால் ஆவேசப்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பாக நாடார் பிரிவினர் பியூலா செல்வராணியின் பேச்சுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   வியாபாரிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய, பெண் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், செல்வராணியின் பேச்சுக்கு, பாதிரியார் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காதது மிகுந்த வேதனைக்குரியது. இச்சம்பவம், வேண்டுமென்றே விஷத்தை தூவும் விதமாகவும் உள்ளது.

  விசாரணை நடத்தி, விஷம பிரசாரம் பரவவிடாமல் தடுக்க வேண்டும். பியூலா செல்வராணி மற்றும் சாமுவேலை கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது.