பைக் மற்றும் ஆட்டோ திருடர்கள் கைது!

ஜி.கே.சேகரன்,
தொடர் இரு வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனம் ஒரு ஆட்டோ பறிமுதல்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால வெங்கட்ராமன் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சேவூர் பகுதியைச் சேர்ந்த டேவிட்சன், சத்துவாச்சாரி சேர்ந்த மதன்குமார், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சிபி (எ) சிபிராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இருந்து 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.