டபுலிங் மூலம் 5 கோடி மோசடி!

கதிர்,
டபுலிங் தொழில் மூலம் பத்து நாட்களில் பணம் குவிக்கலாம் வாங்க என்கிற பெயரில் ரூபாய்5 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டணையும் ரூ.2.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
எங்களிடம் முதலீடு செய்யும் பணத்தை பத்து நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சேலம், கிருஷ்ணகிரியை சேர்ந்த 86 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த தொழிலதிபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.76 கோடி அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேக்ஸ் குரூப் ஆப் டெக்னாலஜி என்ற ஐடி நிறுவனத்தை ஓசூர் கிருஷ்ணப்பா காலனியை சேர்ந்த ராஜா மற்றும் அவரது நண்பரான புகழேந்தி உள்ளிட்ட எட்டு பேர் நடத்தி வந்தனர்.
இவர்கள், கடந்த 2008-10ம் ஆண்டு காலக்கட்டத்தில், தங்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்வோருக்கு பத்து நாளில், அப்பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோடிக்கணக்கில் முதலீடு திரட்டியுள்ளனர்.
இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர், கூறியபடி பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்காமல் ராஜா மோசடி செய்துள்ளனர்.
ஆகவே இதுபற்றி கோபிசெட்டிப்பாளையம் ஐய்யன்புதூர் நாகதேவன்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஜி வி ஜ் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், மேலும் பலர் புகார் கொடுத்தனர்.
இதனால், இவ்வழக்கை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றினர். சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், 86 பேரிடம் ரூ.4.96 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜா, புகழேந்தி உள்ளிட்ட எட்டு பேர் மீதும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அங்கு வழக்கு நடந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.
அதில், ராஜா, புகழேந்தி ஆகியோர் குற்றவாளிகள் என்றும், மற்ற 6 பேரை விடுவித்தும் தீர்ப்பளித்தார்.
இதில் புகழேந்தி மட்டும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தார். அதனால் அவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.76 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தலைமறைவான ராஜாவை கைது செய்து ஆஜர்படுத்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன்பேரில், தொழிலதிபர் ராஜாவை போலீசார் கைது செய்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, ராஜாவை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்