நீதிமன்ற வளாகத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்ட பெண் போலிசார்!

நீதிமன்ற வளாகத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்ட பெண் போலிசார்!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  நாகப்படினம் மாவட்டத்தில் பதிவாளர் அலுவலகம், நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வருகிறது. அங்கு தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் உறவினர்களும் அவரை வலுகட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

 என்னை விட்டுடுங்க என்றூ அந்தப்பெண் கதறி கெஞ்சியும் அவர்கள் விட்டபாடில்லை.

 இந்த காட்சிகளை பார்த்த அங்கிருந்த பொதுமக்களும்மற்றூம் பெண்காவலர்களும்  அந்த பெண்ணை மீட்டனர்.

 பின்னர் விசாரித்த போது,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 23. இவரும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.

 இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாகும். இந்நிலையில் பாரதி, மதன்ராஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

 ஆகவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள கோயில் ஒன்றில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு நீடித்தது வந்த காரணத்தால் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு கடந்த 10ஆம் தேதி திருச்சியிலிருந்து மதன்ராஜின் சொந்த ஊரான நாகப்பட்டினம் வந்துள்ளனர்.

 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) காலை வழக்கறிஞரின் அறிவுறையுடன் பதிவு திருமணம் செய்ய நாகபட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மதன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பதிவு திருமணம் செய்து கொள்ள முயன்றனர்.

  கையெழுத்து போடும் தருவாயில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பாரதியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுகாரில் ஏற்ற்றிச் செல்ல முயற்சி செய்தனர்.

  அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவரையும் மீறி பாரதியை காரில் ஏற்றினர். இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அருகே இருந்த பொதுமக்கள் அவர்களது காரை மறித்து பெண்ணை காரிலிருந்து இறக்கினர்.

  காவல்துறையினர் பெண்ணை மீட்டு அருகே இருக்கும் போக்சோ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பிற்காக அழைத்துச் சென்றனர்.

 அப்படியிருக்க மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை, மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் மதன்ராஜ் புகார் கொடுத்தார்.

 அவர் கொடுத்த புகாரில், "திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது பாரதியின் பெற்றோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 5 நபர்களுடன் நுழைந்து என்னையும், எனது மனைவி பாரதியை அடித்து கீழே தள்ளவிட்டு, எனது மனைவியை அடித்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார்.

 இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், மேஜர் ஆன பெண் பாரதி கணவர் மதன்ராஜிடன் செல்வேன் என்றாதால் அதன்படி நடவடிக்கை எடுத்த போலிசார், மதன்ராஜின் புகார் மீதான நடவடிக்கையை கைவிட்டனர்.

 சட்டபடி பார்த்தால் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நூழ்ய்ந்து பெண்ணை வலுகட்டாயமாக இழுத்துச்சென்ற தந்தை மீதும் மாமன் மீதும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார்கள்.