பள்ளிக்கூட வரி பறிப்பதில் இரண்டு ஊராட்சிமன்ற தலைவர்களுக்குள் லடாய்!

பள்ளிக்கூட வரி பறிப்பதில் இரண்டு ஊராட்சிமன்ற தலைவர்களுக்குள் லடாய்!

 ஜி.கே.சேகரன்,

  உயர்நிலைப்பள்ளி கட்ட வேண்டிய தொழில் வரியை பெற்றுக் கொள்ள இரு வேறு ஊராட்சி தலைவர்கள் உரிமை கொண்டாடுவதால் சுமார் 225 பள்ளி மாணவர்கள் கோயிலில் அமர்ந்து கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரனும் நார்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசனும் கடுமையான போட்டா போட்டி போட்டுக் மொண்டிருக்கிறார்கள்.

 இதுதான் விவரம் ,

    சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ கோபால் என்பவர் நார்சம் பட்டி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கும்மிடி கான்ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் அமைக்க இலவசமாக கொடுத்தார்.

 அன்றைக்கு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அந்த நிலத்தை ஒப்படைத்துள்ளார்.

 அஉடனடியாக அங்கு பள்ளி துவங்கப்பட்டு ஆரம்பத்தில் குடிசையில் இயங்கியது.  பின்னர் படிப்படியாக 2011ம் ஆண்டு மேல்நிலை ப்பள்ளி தரத்திற்கு உயர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

   இன்று வரை கும்மிடிகான் பட்டி ஊராட்சிக்கு செலுத்துபட்டு வந்த தொழில் வரியை நார்சம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசன் தற்போது திடீர் என்று தங்கள் ஊராட்சிக்கு தான் தொழில் வரியை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்து ஒரு வாரத்திற்குள் கட்ட தவறினால் தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடர்வேன் என்று மிரட்டி சென்றுள்ளார்.

  அதற்கு நான் ஒப்புக்கொள்ளமுடியாது என்று மற்றோரு தலைவர் எகிறவே, பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

   இதனைத் தொடர்ந்து கும்மிடிகான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் பயிலும் சுமார் 225 மாணவ மாணவிகளை அழைத்து வந்து தங்கள் பகுதியில் உள்ள கோவிலில் அமர வைத்து துறை சார்ந்த அதிகாரிகளோ மாவட்ட ஆட்சித்தலைவரோ வந்து ஊராட்சி இடத்தை வரையறை செய்து தீர்வு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

    தவறும் பட்சத்தில் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தையே மேம்படுத்தி எங்கள் பகுதி மாணவ மாணவியரை இங்கேயே கல்வி பயில முயற்சி செய்வோம் என்றும் கூறினர். தற்பொழுது நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் மட்டுமே பள்ளியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   பள்ளிக்கூடத்துக்கு இலவசமாக நிலம் கொடுத்தவரை பாராட்டும் மக்கள் மேற்படி தலைவர்களை....வேண்டாம் விடுங்க அசிங்கமாக போய்விடும்?