ஆம்பளையாச்சேன்னு பார்க்குறேன்? பிச்சுபுடுவேன்! வழக்கறிஞரை மிரட்டும் பெண் காவலர்!

ஜி.பாலகுரு,

  வழக்கறிஞர் ராபர்ட் என்பவரை, போக்குவரத்து பெண் காவலர் துர்கா என்பவர் மிரட்டிய விவகாரம் வீடியோ வடிவில் வெளியாகியிருக்கிறது.

    கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகும் .

இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

 இந்நிலையில் கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் நேற்று மாலை பழைய பாலக்கரைக்கு வந்தார். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது.

 நெரிசலில் சிக்கிய வழக்கறிஞர், அருகே ஒரு கடையில் நிழலில் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலிஸை பார்த்து மேடம் டிராபிக்கை சீர்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

  இதனால் எரிச்சலான அந்த பெண் போலிஸ், போய்யா நீ என்ன எனக்கு அட்வைஸ் செய்வது, வேண்டும்னா நீ வந்து இதையெல்லாம் சீர்படுத்து என்று நக்கலாக சொல்லிவிட்டு மீண்டும் ரெஸ்ட்டை தொடர்ந்தார்.

  அதன் பின்னர் வண்டியை விட்டு கீழே இறங்கிய வழக்கறிஞர் ராபர்ட், டிராபிக்கை சீர் செய்யும் பணியை மேற்கொண்டார்.

 இதனால் காண்டான அந்த அம்மையார், யோவ் நீ வக்கீலுன்னா என்ன இப்ப? உன் சட்டையை கழற்றிவிடுவேன் என்று ஒருமையில் பேசினார்.

 நி ஆம்பலையாச்சேன்னு பார்குறேன் இல்லைன்னா பிச்சுபுடுவேன் என்று பெண் காவலர் வழக்கறிஞரை மிரட்டினார்.

நீ என்ன சட்டையை கழற்றுவது? நானே கழற்றுகிறேன் என்று வழக்கறிஞர் சவால் விட்டார். இந்நிலையில் இந்த வீடியோ வெட்டப்பட்டு வழக்கறிஞர் அத்துமீறல் என்று வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் பெண் காவலர்தான் வழக்கறிஞரை நடுரோட்டில் வைத்து மிரட்டினார்.

  இந்த சம்பவம் குறித்து பெண் காவலர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிலுக்கு வழக்கறிஞரின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது .