கருணாநிதி சமாதியில் கோவில் கோபுர அலங்காரம்!

டி.முகமது இர்பான்,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுர அலங்காரம் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்த திமுகவினர் திகைத்து நின்றார்கள்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதுமுதல் இதுவரை அந்த நினைவிடம் கட்சியினர் சார்பில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அவரது சமாதியை கோவில் கோபுரம் போல் மலர்களால் அலங்கரித்திருந்தனர்.
விசாரித்த போது, சட்டபேரவையில் 2022 - 23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. அந்த வகையில் இன்று, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.
இதன் காரணமாக, கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்து உள்ளனர். என்று சொல்கிறார்கள்.