இஸ்லாமும் திராவிடமும் நாணயம் போன்றது! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

இஸ்லாமும் திராவிடமும் நாணயம் போன்றது! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

 ம.பா.கெஜராஜ்,

  இஸ்லாமும் திராவிடமும் நாணயம் போன்றது அதை எப்போதும் பிரிக்க முடியாது, ஆம்பூரில் விரைவில் காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும் ஆம்பூரில்  நடைப்பெற்ற தென்னிந்திய தோல் மற்றும் காலணி தொழிலதிபர்கள்  சங்க கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் பேச்சு.

 திருப்பத்தூர் மாவட்டம், தென்னிந்திய தோல் மற்றும் காலணி தொழிலதிபர்கள் சங்க கூட்டம் ஆம்பூரில் உள்ள வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.

   இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு   கலந்துகொண்டனர். 

  பின்னர் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் இஸ்லாத்தையும், திராவிடத்தையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது, அது நாணயம் போன்றது.

 ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏறத்தாழ 227 தோல் பதனியிடும் தொழிற்சாலைகளும், 110 காலணி தொழிற்சாலைகளும் உள்ளன.

 அவற்றில் 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி,ஆண்டிற்கு 5000 கோடியில் இந்திய அளவில் 18% அன்னிய செலவாணியும் தமிழ்நாடு அளவில் 80% அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகின்றனர்.

 ஆம்பூரில் காலணி தொழிற்பூங்கா அமைத்து, தொழிற்சாலையில் பெண்கள் பணியாற்ற பெண்களுக்கென தனியாக விடுதிகள் கட்டப்படும்.

 மேலும் நெடுஞ்சாலைதுறை சார்பில் தனியாக குழு ஒன்று அமைத்து ஆம்பூர் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு தேவைப்படும் இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யபடும் என பேசினார்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் தோல் மற்றும் காலணி தொழிலதிபர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன், தேவராஜ், அமலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.