ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு! அடாவடி தலைரை நோக்கி கேள்விகள்!

ர.நி.ஆனந்தன்,
சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு அலுவலகம் முன்பு தர்ணா நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சந்திரபுரம் ஊராட்சியில் சுமார் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஜவஹர்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர்லால் சந்திரபுரம் ஊராட்சிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை மேலும் இந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி கணக்கு வழக்குகளை முறையாக வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லையாம்.
அதனைத் தொடர்ந்து அந்தந்த வார்டுகளுக்கு வார்டு உறுப்பினர்களே தங்கள் சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ளுங்கள் அதற்கான நிதி பணம் பிறகு கொடுக்கப்படும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் சுமார் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து ஒன்றரை வருடம் ஆகியும் இதுவரை வார்டு உறுப்பினர்கள் செலவு செய்த தொகையினை வழங்கப்படவில்லை எனக் கூறியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டும் மேலும் 12 வார்டு உறுப்பினர்களில் 9 வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர்லால் வார்டு உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை சந்திரபுரம் ஊராட்சிக்கு எந்த ஒரு நிதியையும் வார்டு உறுப்பினர்களுக்கு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அதிக கழிவுகள் இருப்பதாகவும் அந்த தண்ணீரை தான் தற்போது வரை சந்திரபுரம் ஊராட்சிக்கு குடிநீராக விநியோகம் செய்து வருவதை சுட்டிக்காட்டினார்கள்.
மேலும் இதனை சுத்தப்படுத்த 1லட்சத்து 20ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக பணம் பெறப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தியதின் பெயரில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.