உதயநிதி ஆபிசில் 1 லட்சம் அபேஸ்!

Rajesh Kumar,
திருவல்லிக்கேனி சேப்பாக்கம் தொகுதியின் எம். எல் .ஏ வான உதயநிதியின் ஆபிசில் ஒரு லட்சம் ரூபாயை ஒருவர் அபேஸ் செய்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந்த திருட்டு தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த விவரம் வருமாறு,
சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மற்றும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் தொகுதி அலுவலகம் திருவல்லிக்கேணியில் உள்ளது. இங்கு, பொங்கல் பண்டிகையொட்டி, திமுக நிர்வாககளுக்கு பரிசு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திமுக வட்டச் செயலாளர் வெங்கடேசன் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை அபேஸ் செய்துவிட்டார்.
இந்த திருட்டு குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.