.தமிழக அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மூன்று முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது.
1.தொழில்துறை வசமிருந்த சர்க்கரை ஆலை நிர்வாகப்பிரிவு வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சர்க்கரை ஆலைகள் தொழில் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
2.போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான நிலைய நிர்வாகம், தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விமான போக்குவரத்து துறை, அமைச்சர் ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பனிடம் இருந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர் நலத்துறை வசமிருந்த வெளிநாட்டு மனிதவள கழக நிர்வாகம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விசாரித்த போது, சும்மா ஒரு முன்னோட்டம் மட்டுமே எனவும், நிர்வாக வசதிகளுக்காக மேலும் சில மாற்றங்கள் வரலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஓகே...,ஓகே!