தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்த சித்தராமையா!

தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்த சித்தராமையா!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  கர்நாடகா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

   கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தமிழர்களின் வாக்குகளை கவர பாஜக சார்பில் அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார். அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனை களமிறக்கினார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்.

   பல தொகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால், அத்தகைய தொகுதிகளில் வெற்றிகளை தீர்மானிக்கு சக்தியாக தமிழர்கள் உள்ளனர்.

  ஏனெனில், பல தொகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால், அத்தகைய தொகுதிகளில் வெற்றிகளை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளனர்.

   40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திருமாவளவனின் ஆதரவு தேவைப்பட்டதால், அவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியது. இந்த தொகுதிகளில் எல்லாம் தமிழர்கள் குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து பெங்களுருவில் உள்ள காந்தி நகர், சாந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில்  அவர் தீவிரமாக வாக்குசேகரித்தார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு திருமாவளவன் சின்சியராக பணியாற்றி, பாஜக கிழித்து தொங்கவிட்டார்.

   இந்நிலையில் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா வருகிற 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவில் உள்ள எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு வருகிறது.

   அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் முதல்வராக பதவி ஏற்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.