ஆத்தாடி இவ்வளவு கோரிக்கைகளா?

ஆத்தாடி இவ்வளவு கோரிக்கைகளா?

 கு.அசோக்,

 மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் சினேகலதா தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

 இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் மேலும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை பட்டியலும் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் அளிக்க வேண்டும்,

 மேலும் அரசு உயர்நிலைப்பள்ளியில் பதவி உயர்வு பெறும் தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக செல்ல விருப்பமா அல்லது மாவட்ட கல்வி அலுவலராக பதிவு உயர்வு பெற்று செல்ல விருப்பமா என கேட்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்,

 மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 5: 2 என்ற விகிதாசாரத்தின் படி இருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்போது இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது அதனை மீண்டும் 5:2 மாற்ற வேண்டும்,

 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனவே ரூ,.500 முதல் ரூ.2000 வரையில் தனி ஊதியமாகவும் அகவிலைப்படி ரூ.2000 வழங்க வேண்டும்,

 முதுகலை ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவு உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் எட்டு ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்,

  அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ரக ஆய்வகத்திற்கு பராமரிக்கும் வகையில் தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும்,

  2019 -2020 வரையில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத கொரோனா காலம் என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும்,

  மாவட்ட கல்வி அலுவலர் பணியிட நியமனத்தில் 40:35:25 என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கபடுகிறது அதையே முதன்மை கல்வி அலுவலர் இணை இயக்குநர் பதவி உயர்விலும் கடைபிடிக்க வேண்டும் ஆகிய 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.