ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முந்துகிறது!!முஸ்லிம் ஓட்டுகளுக்கு வேட்டுவைத்த அண்ணாமலை! கறிசோறு டூர் வைத்து குஜால்!
ம.பா.கெஜராஜ்,
கறி சோறு, பணம் மற்றும் இன்பச் சுற்றுலா என்று கூறி ஈரோடு கிழக்கில் ஒரு பகுதியின் மொத்த வாக்காளர்களையும் திமுகவினர் அழைத்துச் செல்லும் காட்சி தற்போது பரவலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு ஆதரவாக விதவிதமான தேர்தல் பணிகள் நடந்துவருகின்றன.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை டம்மியாக்கும் விதமாக பல இடங்களில் பட்டி கட்டி வாக்காளர்களை மடக்கி போட்டது திமுக, அதே தற்போது வாக்காளர்களை வேன்கள் மூலமாக இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கின்றது.
அதற்காக நூற்றுக்கணக்கான டூரிஸ்ட் வாகனங்கள் குத்தகை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதே போல் கறி சோறு விருந்து பணம் என்று பிரச்சாரம் திணுசு திணுசாக போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கு அ.தி.மு.க.வினர் ஈடு கொடுத்தாலும் கூட அதிகாரம் கையில் இல்லாததால் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்க தேர்தல் களத்தில் காங்க் வேட்பாளர் திமுக ஆதரவிலும், அதிமுகவும் தனது சொந்த வேட்பாளருடனும் போட்டியிடுகிறது. நாம் தமிழர், தேமுதிகவும் களத்தில் நிற்கிறது. இவர்களோடு சுமார் 70 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
நான்கு முனைக போட்டி என கூறப்பட்டு வந்த நிலையில் திமுக கூட்டணி அதிமுக நேரடி ஃபைட் என்கிற நிலையே களத்தில் இருக்கிறது.
ஆனால் தேமுதிகவும், நாம் தமிழர் பெறப்போகும் வாக்குகள் யாருக்கு மைனஸ் ஏற்படுத்தும் என்பதைப்பொறுத்தே திசை மாறும்.
இதில் விஜயகாந்தின் ரசிகர்கள் இந்த பகுதியில் அதிகம் இருக்கிறார்கள்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக இந்த தொகுதியில் திமுகவை வீழ்த்தியது. எனவே தனக்கு சாதகமான தொகுதியில் நடைபெறும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனக்கான வாக்கு சதவீதத்தை அதிகரிக்க திட்டமிட்டிருந்தாலும் அது அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.
எப்படி பார்த்தாலும் 3000 முதல் 5000 வாக்குகள் வரை மட்டுமே கிடைக்கும் எனது தொகுதி நிலை.
நாம் தமிழர் கட்சியின் ஆரம்ப கட்ட பிரச்சாரங்களை, சீமானின். அருந்ததியர்களுக்கு எதிராக பேசி பேச்சு திசை திருப்பிவிட்டுள்ளது.
கூடவே திமுகவினரோடு ஏற்பட்ட மோதலில் மண்டை உடைப்பு போன்ற சம்பவங்களும் மைனஸ் தான் என்கிற சூழலில் நாம் தமிழர் கட்சி 12 ஆயிரம் வாக்குகளை கடக்காது என்கிற நிலையே உள்ளது.
தொகுதியில் செங்குந்த முதலியார் சமூக வாக்குகள் பிரதானமாக இருப்பது போல் இஸ்லாமியர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கிறது.
ஆனால் அதிமுக, பாஜகவுடனான கூட்டணியின் காரணமாக இந்த வாக்குகளை கொத்தாக இழக்கும் என்றே கூறுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் பலரும் வெளியூரிலிருந்து இஸ்லாமியர்களை இறக்கி இரட்டை இலையை மறந்துவிடாதீர்கள் என பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால் அண்ணாமலையின் பிரச்சாரத்துக்குப் பின் இஸ்லாமியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு எதிராக நடையைகட்டிவிட்டது. ஆக அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலம் என்கிற கதை கட்டவிழ்ந்துவிட்டது.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றுள்ளார். அனைவராலும் அணுகக்கூடியவர், எளிமையாக பழகக் கூடியவர் என்று அவரை பாராட்டினாலும், கூட்டணி குளறுபடியால் பணால் தான்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தொகுதிக்குள் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட, திமுக கூட்டணி வாக்குகளால் அவர் வெற்றிபாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த அளவுக்கு திமுக பிரச்சாரம் தூபம் போட்டுக்கொண்டிருக்கிறாது.
கமலஹாசனின் ஆதரவு ஏட்டு சுரைக்காய்தான் என்றாலும் கூட ஆளும் திமுக வின் கொடி அங்கு தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
தொகுதிக்குள் எங்கு திரும்பினாலும் இலவச கறிசோறு போட்டு திமுக வினர் அசத்திவருகின்றனர்., பாவம் வாக்காளர்கள்.