ஆற்றோடு சென்ற இளைஞர்!அமைச்சர் மஸ்தான் ஆய்வு!

ஆற்றோடு சென்ற இளைஞர்!அமைச்சர் மஸ்தான் ஆய்வு!

A.Aravinthan,

 ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை நான்காவது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

   விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செவலபுரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமத்துக்குச் செல்லும் தரைப்பாலத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சிவகுமார் (35) என்பவரை தேடும் பணி நான்காவது நாளாக நீடித்து வருகிறது.

 காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக தேடி வரும் நிலையில், தேடுதல் பணியை துரிதப்படுத்த, தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்

மூன்று நாட்களாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மீட்கப்படாததால் அக்கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறனர்.

இந்நிலையில் அங்கு அமைச்சர் சென்றதால் மக்கள் கொஞ்சமாக ஆறுதல் அடைந்துள்ளனர்.