பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய புள்ளிங்கோ கைது!

K.asoke,
தீபாவளிக்கு பணம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் பணம் தராததால் ஊழியரை தாக்கிய மூன்று புள்ளிங்கோ கைது,
திருப்பத்தூர் அடுத்த களத்தூர் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் விக்னேஷ் என்ற நபரிடம் நேற்று மாலை மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், திருமலை, பவித்ரன் , குடிபோதையில் இருந்த மூன்றுபுள்ளிங்கோ தீபாவளிக்கு பணம் கேட்டு மிரட்டி அவரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பணம் தராததால் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர் படுகாயமடைந்த விக்னேஷ் திருப்பத்தூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக அனுமதிக்கப்பட்டுள்ளார் தீபாவளிக்கு பணம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியரைய தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் புள்ளிங்கோ மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.