ஒரு அடி கத்தியில் செம குத்து!

ஒரு அடி கத்தியில் செம குத்து!

 கு.அசோக்,

 பிரிந்து சென்ற மனைவியிடம் சேர்ந்து வாழ வேண்டுமென கேட்க சென்ற அக்கா கணவரை கத்தியால்  சராமாறியாக தாக்கிய மைத்துனர்

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை, கச்சாலநாயக்கர் தெருவில் வசிப்பவர் அசோக் (32), இவர் ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

  இந்நிலையில் அசோக் அதே தெருவை சேர்ந்த இவருடைய மாமன் மகளான விஜி (எ) விஜயலட்சுமி-யை (25) கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்து, ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

 கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

   இந்நிலையில், இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் வேளையில் அசோக் தனது மனைவி விஜயலட்சுமியை இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று செல்போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.

  அப்போது இருவருக்கும் இடையே செல்போனில் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 இந்த பிரச்சனை காரணமாக விஜயலட்சுமி தம்பியான மணிகண்டன் (எ) விஜயகுமார் (23) தன் அக்காவை மாமா மிரட்டுகிறார் என நினைத்த நிலையில், நேற்று இரவு அசோக் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞர் பின் தொடர்ந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது சண்டையாக மாறி அந்த இளைஞர் தனது உடம்பில் மறைத்து வைத்திருந்த ஒரு அடி நீளம் உள்ள கத்தி எடுத்து தன் மாமா அசோக்கை முதுகில் மற்றும் கழுத்து, தலையில் என பல்வேறு இடங்களில்  குத்தி கிழித்தார்.

  கத்தியால் குத்தியதில்  நிலைகுலைந்த அசோக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை  அக்கம்பக்கம் உள்ளவர்கள் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா  அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

   இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் அக்கா கணவரை வெட்டிய மணிகண்டன் (எ) விஜயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த மாமாவையே மைத்துனர் கத்தியால் தாக்கிய சம்பவம் வாலாஜாபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.